Login

Lost your password?
Don't have an account? Sign Up

ஜென் கதையும் குறள் மொழியும் | பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல்!

Contact us to Add Your Business

ஜென் கதையும் குறள் மொழியும் | பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல்! | நாளும் பல நற்செய்திகள்

06.0822

மிக அமைதியாக, ஒரு மரத்தடியில் வீற்றிருந்தார் ஜென் குரு. அந்த வழியாகச் சென்ற வீரன் ஒருவன் அவரைக் கண்டதும் தனது குதிரையை விட்டு கீழே இறங்கினான். கண்களை மூடி அமைதியாக அமர்ந்திருந்தார் ஜென் குரு. மெல்ல அவர் அருகில் சென்று கைகூப்பி வணங்கினான் அந்த வீரன். சிறிது நேரம் கழித்து, குரு தனது கண்களைத் திறந்து அவனை ஊடுருவி நோக்கினார்! எதுவும் பேசவில்லை.

குருவே! எனக்கு ஒரு சந்தேகம். இது நீண்ட நாட்களாகவே எனக்குள் உள்ளது. தாங்கள்தான், அதற்கு விடைகூற வேண்டும்.

குரு அப்போதும் அமைதியாக அவனையே நோக்கியபடி இருந்தார்.

சொர்க்கம் – நரகம் என்றெல்லாம் சொல்லப்படுகிறதே, அது உண்மையிலேயே உள்ளதா? வீரனிடமிருந்து வந்த கேள்வி.

ஜென் குரு பதிலெதுவும் சொல்லவில்லை. ஆனால் அவனோ, விடைபெறாமல் விடுவதாக இல்லை.

குரு இப்போது அவனைத் தீர்க்கமாக நோக்கினார்! சிறிது நேரம் கழித்து மெல்ல, அவர் ஒரு கேள்வியைக் கேட்டார். நீ என்ன செய்கிறாய்?

நான் இந்த நாட்டின் தளபதி! எல்லாப் படை வீரர்களுக்கும் நான்தான் சேனாதிபதி என்றான்.

அவரிடமிருந்து உடனே, ஒரு கேலிச் சிரிப்பு வெளிப்பட்டது. நீ ஒரு முட்டாள்! உன்னைப் போன்ற மடையனை, எவன் சேனாதிபதியாக நியமித்தான் என்று கேலியாகச் சிரித்தார்.

இதைக் கேட்ட அந்த வீரன், கோவத்தில் தன் உறையிலிருந்து வாளை உருவினான். இதோ நரகத்தின் கதவுகள் திறக்கின்றன, என்றார் குரு சிரித்தபடியே!

இதைக்கண்டு ஒரு வினாடி பிரமித்த வீரன், சட்டென வாளை உறையில் இட்டுவிட்டு, கைகூப்பி அவரை வணங்கி, ‘மன்னிக்க வேண்டும் குருவே’ என்றான் பணிவுடன்.

இதோ, சொர்க்கத்தின் கதவுகள் திறந்துவிட்டன என்றார் குரு, அதே சிரிப்போடு!

“பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்” – வள்ளுவப் பெருமகனார் தந்தருளிய குறள் மொழி.

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

19 comments

  1. ramasamy varadharajan

    புலியின் உடலிலும் பூ போன்ற மென்மை உண்டு. . அது இதுதான்🌱🍀🌳🌴🌷🌹🌺🌸🦋🌽🌾🙏🏾💪🐯

  2. Nature Life

    நியாயமான பயன் சொர்க்கம்…
    அநியாயமான பயன் நரகம்.

    மனநிறைவு சொர்க்கம்…
    மன அழுத்தம்/அதிருப்தி நரகம்.

  3. Kutty Kutty

    ஓடாத இனமும் போராடத இனமும் வெற்றி பெற்றதாக சரித்திரம் இல்லை நாம் தமிழர் என்று திமிராக சொல்வோம்

  4. Viyo Shop

    எனக்கும் நீண்ட நாட்கள் இந்த சந்தேகம்தான். உங்களிடம் கேட்க வேண்டும் என்று நினைத்தேன் விளக்கம் அளித்ததமைக்கு நன்றிகள் சீமான்ஜி ஐ. லவ் லையயூயூயூயூயூயூயூயெ.

  5. Fluffy candyfloss 🍭

    துயரம் கண்டு துவளுவான் அதற்குள்ளும் ஒரு மென்மை உண்டு
    இவர்கள் பிறர் துயர் கண்டு மகிழ்ச்சி கொள்வதில்லை
    அததற்காக நேர்மையான வழியில் போராடுவார்கள்
    அறம் எப்போதும் வெல்லும்
    அழகான பதிவு இறையருள் நல் வாழ்த்துக்கள் அண்ணா வாழ்க வளமுடன் வளர்க சிறப்புடன் 🥰🥰❤️❤️

  6. Boss

    அண்ணே இந்த தம்பி உங்களிடம் ஒரு விடயத்தைப் பற்றி தெளிவு பெற விரும்புகிறேன். நத்தம் சிவசங்கரன் அவர்கள் சிறையில் உள்ளதாக தெரிகிறது. இது தொடர்பாக உங்களின் கண்டனம் எதுவும் வெளிவரவில்லை நினைக்கிறேன். இது பற்றிய உண்மையை வெளிப்படையாக மக்களுக்கு உணர்த்துமாறு நான் அன்புடன் உங்களை கேட்டுக்கொள்கிறேன்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*