Login

Lost your password?
Don't have an account? Sign Up

27-1-2016 திருமுருகப் பெருவிழா சீமான் உரை திருப்பரங்குன்றம் | Seeman Speech ThiruMuruga Peruvizha

Contact us to Add Your Business

நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி சார்பாக 27-01-2016 அன்று மதுரை, திருப்பரங்குன்றத்தில் முப்பாட்டன் முருகனைப் போற்றும்விதமாக ‘திருமுருகப் பெருவிழா’ பொதுக்கூட்டம் மற்றும் பேரணி நடைபெற்றது. முன்னதாக பேரணி திருப்பரங்குன்றம் கோயில் அருகேயுள்ள 16 கால் மண்டபம் அருகே தொடங்கி முப்பாட்டன் முருகன் கோயில்வரை நடைபெற்றது. இதில் பறையிசை, தாரைத்தப்பட்டை முழங்க பச்சையுடை உடுத்தி ஒரு கையில் வேலையும், மறு கையில் தலைவர் பிரபாகரன் அவர்களின் படத்தையும் ஏந்திக்கொண்டு, ‘முருகன் என்றால் அரோகரா! தலைவன் என்றால் பிரபாகரா’, ‘வெற்றிவேல்! வீரவேல்’ என முழக்கங்கள் எழுப்பி ஆடிப்பாடியபடி கோயில் சன்னதியை அடைந்தனர். இது காண்போரை உணர்ச்சிவெள்ளத்தில் ஆழ்த்தியது.

பொதுக்கூட்டம் கலைநிகழ்ச்சியுடன் தொடங்கியது. மதுரை கலை இலக்கியப் பண்பாட்டு பாசறை சார்பாக சிலம்பாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம் உள்ளிட்ட தமிழரின் வீரத்தைப் பறைசாற்றும் கலைநிகழ்ச்சிகள் கூடியிருந்த மக்களை வியக்க வைத்தது.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் பண்பாட்டு மீட்சியுரை நிகழ்த்தினார்.

27-1-2016 திருமுருகப் பெருவிழா சீமான் உரை -திருப்பரங்குன்றம் | Seeman Speech in Madurai Thiruparankundram ThiruMuruga Peruvizha
——-

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை!

இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

2016 – உருவாக்குவோம் புதிய அரசியல் வரலாறு!

Please Subscribe & Share Our Videos on Social Medias:

கட்சியில் இணைய : +91-90925 29250

இணையதளம் :

காணொளிகள்: ttps://www.youtube.com/NaamThamizharKatchi/

முகநூல் :

சுட்டுரை:

கூகுள்+:

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | Naam Thamizhar Katchi Official Videos | Naam Tamilar Seeman Videos | Naam Tamilar Seeman Speeches | Naam Tamilar Party Latest Videos

https://www.tiruchirappallidistrict.com

21 comments

  1. Rajesh Thamizh

    அறிவுக் களஞ்சியமாய் அண்ணனின் உரை.. தாய்த் தமிழ் உறவுகள் அனைவரும் காணவேண்டும்..

  2. lunch box

    முதலில் நாம் தமிழர் சீமான்அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைதெரிவித்துகொள்ககிறேன்,சீமான் அவர்களின் அரசியல்விமர்சகம் தெளிவாகவும் மற்றவரின் மனதில் பதிய கூடியதகவும் உள்ளது இவரைவிட உலகஅரசியல் பற்றி மிக எளிமையாக யாராலும் பேச இயலாது இன்று நடக்கும் சமூக பிரிச்சனை யும் முற்போக்கு சிந்தனையுடன்கையாளுவதை திரு,சீமான் அவர்களை மிஞ்சமுடியாது
    ஜல்லிக்கட்டு,மீத்தேன் எரிகாற்று கூடகுளம் அணுமின்நிலையலம் கேரளாவில் இருந்து தமிழ்நாட்டின் வழியாக கர்நாடகாவிற்கு கொண்டுசெல்லும் எரிவாயு ஆபத்து என்று இன்னும் சொல்லிக்கொண்டு போகலாம் ,உங்கள் ஒளிநாட சிரு துண்டுகள் அனைத்தையம் பகிரியின் முலம் மற்றவர்களுக்கு அனுப்புகிறேன்,என் நண்பர்களிடமும் உங்களின் அரசியல் விமர்சகம்பற்றி கலந்துரையாடலில்
    ஈடுபடுகிறேன் என்னால் முடிந்தவரை என்நண்பர்களின் வாக்குகள் உங்களுக்கு செலுத்த சொல்லிக்கொண்டு இருகிறேன் ,மறதி ஒருதேசிய வியாதி மீண்டும்மீண்டும் நினைவு படுத்துவது நமதுகடமை வரும் 2016 தேர்தலில் வெற்றி வாகை சூட எல்லாம் வல்லஇறைவனை பிரத்திகிறேன்
    நாம் தமிழர்

  3. சே. பாண்டியன்

    என்னுடைய குடும்ப ஓட்டு மற்றும் என்னுடைய நண்பர்கள் குடும்ப ஓட்டு 23 ம் நாம் தமிழர் கட்சிக்கு

  4. Dineshbaabu

    இது வரைக்கும் ஓட்டுச்சாவடி பக்கமே போனதில்லை..இனிமேல் நாம்(நம்) தமிழருக்காக நிச்சயம் ஓட்டு போட்டே தீருவேன்.

  5. Kumar Vennavasal

    தமிழ் / தமிழர் தொடர்பின்றி மெய்யுணர்தல் முடியாது / எங்கள் திருநாட்டில், எங்கள் நல்லாட்சியே.

  6. Dineshbaabu

    மானமுள்ள,வீரமுள்ள,பண்புள்ள,அன்புள்ள,நாகரீகமுள்ள தமிழர்கள் அனைவரும் இந்த எழுச்சி உரையை ஒரு முறையேனும் கேட்க்க வேண்டும்.தமிழர்கள் வெல்வது உறுதி, அந்தக்காலம் மிக அருகில் தெரிகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*