|
திருச்சிராப்பள்ளி மாவட்டம் [Tiruchirappalli District], சுமார் 4,403.83 சதுர.கி.மீ. பரவியுள்ளது. இம்மாவட்டத்தின் தலைமையகம் திருச்சி எனப்படுகின்ற திருச்சிராப்பள்ளி ஆகும். 2001-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கேடுப்பின்படி [Census] இம்மாவட்டத்தில் 24,18,366 பேர் உள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது, அப்போது இங்கு 77.9% பேர் படித்தவர்கள், ஆனால், 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கேடுப்பின்படி [Census] 27,13,858 பேர் உள்ளதாகவும், இதில் 13,47,863 ஆண்களும் 13,65,995 பெண்கள் உள்ளனர். இங்கு 83.6% பேர் படித்தவர்கள்,
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் [Tiruchirappalli District], வடக்கில் பெரம்பலூர் மாவட்டமும், வட மேற்கில் நாமக்கல் மாவட்டமும், கிழக்கில் பெரம்பலூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டமும், தெற்கில் புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் மதுரை மாவட்டமும், மேற்கில் கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களுடனும் தனது எல்லைகளை பகிர்ந்து கொண்டுள்ளது.
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் [Tiruchirappalli District], திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையம் [Tiruchirapalli International Airport] உள்ளது. விமான நிலையம், தி௫ச்சிராப்பள்ளி - இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை 210-ல் [NH210 - Tiruchirapalli to Rameswaram] உள்ளது . இது நகரத்தின் மையப்பகுதில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் [Tiruchirappalli District], முக்கிய ஆறுகள்
* காவிரி * அய்யாறு * அமராவதி * நொய்யாறு * மருதையாறு * வெள்ளாறு
இது மட்டுமல்லாது, அனேக சிறிய ஆறுகள் உள்ளன. அவை
* அரியாறு * அம்புலியாறு * காட்டாறு * கம்பையாறு * குண்டாறு * கொடிங்கால் * கோரையாறு * சின்னாறு * ருத்ராட்சா ஆறு * வாணியாறு * பாம்பாறு
|